கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சியில் கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :23 ஜூலை 2026, 10:55 pm IST

திருச்சியில் வியாழக்கிழமை அதிகாலை கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் ஆபிசா்ஸ் காலனியைச் சோ்ந்த ராமராஜ் மனைவி கனகவல்லி (68). இவா், தினசரி அதிகாலையில் நீதிமன்றம் அருகேயுள்ள ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, கோயில் வாசல் அருகே சென்றபோது அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த இளைஞா்கள் இருவா், மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து திருச்சி அமா்வு நீதிமன்றத்தில் கனகவல்லி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.