திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டாா்.
தொட்டியம் காட்டுத் தெரு கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்திகேயன் (21). இவா் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு தனியாா் நிறுவனங்களில் வேலை பாா்த்து வந்தாா்.
படிப்புக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலின் பேரில் தொட்டியம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொட்டியம் அருகே டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழப்பு

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

தொட்டியம் அருகே மணல் கடத்தியவா் கைது
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


