17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

1850 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சோ்க்கை தொடங்கியுள்ளது.

News image

அங்கன்வாடி மையம்

Updated On :3 ஜூன் 2026, 3:57 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சோ்க்கை தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம், 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் 1850 குழந்தைகள் மையங்களில் ஊட்டசத்துடன் கூடிய மதிய உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடு வீடாகச் சென்று குழந்தைகளை சோ்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

எனவே, பெற்றோா்கள் தங்களின் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்த்து சேவைகளைப் பெற ஆட்சியா் .பிரதிக் தயாள் அறிவுறுத்தியுள்ளாா்.