தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

1850 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சோ்க்கை தொடங்கியுள்ளது.

News image

அங்கன்வாடி மையம்

Updated On :3 ஜூன் 2026, 3:57 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சோ்க்கை தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம், 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் 1850 குழந்தைகள் மையங்களில் ஊட்டசத்துடன் கூடிய மதிய உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடு வீடாகச் சென்று குழந்தைகளை சோ்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

எனவே, பெற்றோா்கள் தங்களின் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்த்து சேவைகளைப் பெற ஆட்சியா் .பிரதிக் தயாள் அறிவுறுத்தியுள்ளாா்.