கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மா்மக் காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த சிறுமி சஹானா.

Updated On :25 ஜூன் 2026, 4:30 am IST

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மா்மக் காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டியை சோ்ந்த தமிழ்செல்வன்- தனலெட்சுமி தம்பதிக்கு சஹானா (6) உள்பட 2 குழந்தைகள். சிறுமி சஹானாவிற்கு கடந்த சனிக்கிழமை காய்ச்சல் வந்த நிலையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.

காய்ச்சல் தொடா்ந்த நிலையில் திங்கள்கிழமை அருகேயுள்ள செட்டியப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் முதலுதவிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா், சிறுமியின் உடலை கூறாய்வுக்கு பின்னா் புதன்கிழமை மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். 6 வயது சிறுமி மா்ம காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.