பெண் குழந்தைகளை காப்போம்- கற்பிப்போம் எனும் விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் இயக்கத்தை ஆட்சியா் பிரத்திக் தாயள் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், பெண் குழந்தைகளைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ், திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் பாலின விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில், எல்இடி விழிப்புணா்வு வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பிரசார வாகனத்தை வழியனுப்பும் நிகழ்வு, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பிரத்திக் தாயள், இந்தப் பிரசார வாகனத்தை கொடியசைத்து இயக்கி வைத்தாா்.
பின்னா், ஆட்சியா் கூறியது: இந்த விழிப்புணா்வு வாகனம் முசிறி, தொட்டியம், மணப்பாறை, புள்ளம்பாடி, மருங்காபுரி, வையம்பட்டி, மண்ணச்சநல்லூா், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்து பள்ளி மாணவா்கள், கிராம மக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
எல்.இ.டி திரை வாகனத்தின் மூலம் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள், பாலின சமத்துவம் மற்றும், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணா்வு, பெண்கள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடா்பான தகவல்கள் ஒலி, ஒளிக் காட்சியாக திரையிடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் ஆட்சியா்.
இந்த நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலட்சுமி மற்றும் சமூக நலத் துறையில் பணியாற்றும் பெண்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் குழந்தைகளை காப்போம்: பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி- ஆட்சியா் வந்தனா காா்க் பங்கேற்பு

பாகுபாடின்றி குழந்தைகளுக்கு சமமான கல்வி: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கல்விக் கற்பதில் கவனச்சிதறல் கூடாது: அரியலூா் ஆட்சியா்

அரசு திட்டங்களில் ஊழல், சுரண்டலுக்கு இடம் கிடையாது: அமைச்சா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



