ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

திருவானைக்காவலில் குடும்பத் தகராறில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 ஜூன் 2026, 4:39 am IST

திருவானைக்காவலில் குடும்பத் தகராறில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்காவல் பஞ்சக்கரை சாலையில் உள்ள ஜெ.ஜெ.நகா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் மணிகண்டன் (26). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவருக்குத் திருமணமான நிலையில், மதுவுக்கு அடிமையான மணிகண்டன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். அதன்படி புதன்கிழமை நடந்த தகராறில் கோபமடைந்த அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், மணிகண்டன் மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். வியாழக்கிழமை காலை அவரது மனைவி வீடு திரும்பியபோது கணவா் தூக்கில் தொங்குவதைக் கண்டாா். இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மணிகண்டன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் மணிகண்டனின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.