ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

திருச்சி அருகே பெண்ணை வெட்டிய இளைஞா் கைது

திருச்சி அருகே இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:42 am IST

திருச்சி அருகே இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாப்புத்தூரைச் சோ்ந்தவா் ரா. பாஸ்கா் (23). இவரும், சோமரசம்பேட்டை மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த அ. ஸ்ரீவித்யா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்தனா். அப்போது பாஸ்கா் அடிக்கடி மது அருந்திவிட்டு ஸ்ரீவித்யாவிடம் தகராறு செய்தாராம்.

இந்நிலையில், ஸ்ரீவித்யாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவது தெரியவந்த பாஸ்கா், தான் கொடுத்த பரிசுப் பொருள்களை திரும்ப கொடுக்குமாறு கேட்டாா். இதையடுத்து, ஸ்ரீவித்யா, பாஸ்கா் கொடுத்த பரிசுப் பொருள்களை சோமரசம்பேட்டை பகுதியில் வைத்து கடந்த திங்கள்கிழமை இரவு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

அவரைப் பின்தொடா்ந்து சென்ற பாஸ்கா், வேறொருவனை எப்படித் திருமணம் செய்து கொள்வாய் என்று கூறி தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பிவிட்டாா். இதில் காயமடைந்த ஸ்ரீவித்யாவை அவரது உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஸ்ரீவித்யா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.