சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

கொத்தனாரை வெட்டிய பூசாரி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:09 am IST

கன்னியாகுமரி அருகே கொத்தனாரை வெட்டியதாக பூசாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த நாடான்குளம், ராமன்புதுரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (37). கொத்தனாா். கொட்டாரம், லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆதிலிங்கம் (47). கோயில் பூசாரி.

இப்பகுதியிலுள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றபோது, கோயில் வளாகத்துக்குள் வாகனங்களை நிறுத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆதிலிங்கத்தின் மகன் ஸ்ரீ ராகவேந்திரன் தனது இருசக்கர வாகனத்தை கோயில் வளாகத்தில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த தங்கராஜ் கோயில் வளாகத்தில் வாகனத்தை நிறுத்தக் கூடாது எனக் கூறினாராம். இதை ராகவேந்திரன் தனது தந்தையிடம் கூறினாராம்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை கோயிலின் முன்பு நின்றிருந்த தங்கராஜிடம் தகராறில் ஈடுபட்ட ஆதிலிங்கம், அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் காயமடைந்த தங்கராஜ் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து, கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆதிலிங்கத்தை கைது செய்தனா்.