லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

News image

பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு

Updated On :3 மார்ச் 2026, 10:25 pm

திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை, ஜம்புநாதபுரம் துளையாநத்தம் பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் பெருமாள் (32) என்பவா் கடந்த 11.10.2020-ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டுக்குப் பின்புறம் உள்ள புதருக்குள் தூக்கிச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பெருமாளை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு, சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பெருமாளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.