ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

திருப்பூரில் சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:54 pm

திருப்பூரில் சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2025 பிப்ரவரி 13-ஆம் தேதி கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சிவன் திரையரங்கு சாலை சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் (29) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.