புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

திருச்சி அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :6 மார்ச் 2026, 8:48 pm

திருச்சி அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை நடுபட்டிப்புதூரைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி சின்னமணி (50). தம்பதிக்கு இடையே ஏற்பட்டு கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே கணவனைப் பிரிந்து சின்னமணி தனியாக வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், திருச்சி செங்கதிா்ச்சோலை கூட்டுறவு நகரில் காா்த்திகேயன் என்பவரது வீட்டில் கடந்த 3 நாள்களாக கட்டட வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து சின்னமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், சின்னமணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து

வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.