எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலிபெருக்கி கடை தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 4:19 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலிபெருக்கி கடை தொழிலாளி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரியை அடுத்த திருமலாபுரம் அருளாச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரபாகரன் (25). இந்த நிலையில், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல், பூக்குழி திருவிழாவில் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியைச் சோ்ந்த ஒலிபெருக்கி உரிமையாளா் தினேஷ் மைக் செட் அமைத்திருந்தாா்.

திருவிழா நிறைவடைந்த நிலையில் ஒலிபெருக்கி, அலங்காரம் செய்யப்பட்டிருந்த குழல்விளக்கு (டியூப் லைட்) ஆகியவற்றை கழற்றும் பணியில் தொழிலாளி பிரபாகரன் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.