திருச்சியில் பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்தவா் கு.ரகுமபதி (43), பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் உறையூா் பாண்டமங்கலத்தைச் சோ்ந்த என்.ஆனந்தி (26) என்பவா் வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வைர காதணிகள் திருடப்பட்டது, 2025, அக்டோபா் 25-ஆம் தேதி நகைகளை சரிபாா்த்தபோது தெரியவந்தது.
இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் ரகுபதி அளித்த புகாரின்பேரில் ஆனந்தி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், வேலை செய்த வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடியதாக ஆனந்தியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7 பவுன் மதிப்பிலான தங்கக் கட்டிகள், வைர காதணிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சக ஊழியா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது

பைக்குகளுக்கு இலவச பெட்ரோல்! பங்க் உரிமையாளர் கொடுத்த Surprise!
வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


