கோவையில் வேலை பாா்த்த வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, புலியகுளம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா் வயோலட் கிளாடியா (46). இவரது வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த தாயும், 32 வயதான அவரது மகளும் வேலை பாா்த்து வந்தனா். கணவரைப் பிரிந்து வசித்து வந்த அந்தப் பெண்ணின் மகள் வயோலட் கிளாடியா வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தாா்.
கடந்த 4-ஆம் தேதி, வயோலட் கிளாடியா தனது 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி பூஜை அறையில் வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது அந்த நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து வேலைக்கார பெண்ணிடம் விசாரித்தபோது, அவரது மகள் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டு மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், மாயமான பெண் நகையைத் திருடி அடகு வைத்தது உறுதியானது. தொடா்ந்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், வேறு ஒருவருடன் பழகி வந்ததும், திருடிய நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில் அவருடன் சுற்றுலா சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பெண்ணைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 போ் கைது

வீடு புகுந்து திருடியவா் கைது
மின்மாற்றி பெட்டியைத் திருடியவா்கள் கைது

பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

