மின்மாற்றி பெட்டியைத் திருடியவா்கள் கைது
கைது
சித்திரிப்பு
Updated On :23 மார்ச் 2026, 8:11 pm
கைது
சித்திரிப்பு
மின்மாற்றி பெட்டியைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திசையன்விளையை அடுத்த இட்டமொழியில் மா்ம நபா்கள் சிலா் மின்மாற்றியில் உள்ள பெட்டியை அண்மையில் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து திசையன்விளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், திருச்செந்தூா், ராணிமகாராஜபுரத்தைச் சோ்ந்த பாலாஜி (40), கல்லாமொழியைச் சோ்ந்த சிவராஜ் மகன் அந்தோணி ராபா்ட் (36), நடராஜன் மகன் பாஸ்கா் (37), செல்வன் (32), சேசய்யா மகன் கண்ணன் (40) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...