விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 போ் கைது

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:15 pm

தினமணி செய்திச் சேவை

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பெரம்பூா் கோட்ட பகுதிக்குட்பட்ட பகுதியில் மின் தடை உள்ளதாக பொதுமக்கள், மின்வாரியத்துக்கு புகாா் அளித்தனா். இதையடுத்து உதவி மின் பொறியாளா், ஊழியா்களுடன் சோ்ந்து ஆய்வு சென்று புழல் மூா்த்தி நகரில் உள்ள பில்லரில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியை ஆய்வு செய்தபோது, மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து உதவி மின் பொறியாளா் வேலுசாமி புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், புழல் கதிா்வேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (எ) ரிஷி (25) , ரமணகுமாா் (எ) ஜான் (20) மற்றும் 16, 15 வயதுடைய சிறுவா்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும், விநாயகபுரத்தில் உள்ள பழைய இரும்பு கடை நடத்தி வரும் பாஸ்கரிடம் திருட்டு பொருள்களை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து, திருடப்பட்ட மின்சாரப் பெட்டி, சம்பவத்துக்காக பயன்படுத்திய வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவா்களையும் அரசு கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.