ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!

பெரம்பூரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு..

Permission denied for Vijay's campaign in Perambur tomorrow?

கோப்புப் படம் - IANS

Published On :

சென்னை பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் நாளை(மார்ச் 28) மேற்கொள்ளவிருந்த பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தவெக தலைவர் விஜய் நாளை(மார்ச் 28) முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருந்தார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் நாளைய பெரம்பூர் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

நாளை காலை 10 மணிக்கு பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த இடத்தில் 3,000 பேர் கூடினால் அசம்பாவிதம் நிகழும் என காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே தாமதமாக விண்ணப்பித்ததால் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பொதுக்கூட்டம், பிரசாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் இன்று காலை இதுதொடர்பாக விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Permission denied for Vijay's campaign in Perambur tomorrow?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.