பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், பிரபல நடிகர் விஜய் தலைமையிலான தவெக 233 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது. மேலும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) பெரம்பூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தவெகவின் தேர்தல் பணிமனைக்கு விஜய் நேரில் சென்று, அக்கட்சியின் விசில் சின்னத்தில் கோலமிட்டு அப்பகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று விஜய் இன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் பிராசரம் ரத்து செய்யப்படுவதாக, தவெக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.
இத்துடன், நாளை திருச்சி கிழக்கிலும் வரும் ஏப். 20 அன்று பெரம்பூர் தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவார் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that TVK leader Vijay's election campaign in the Perambur Assembly constituency, scheduled for today, has been cancelled.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் அமோக வெற்றி!
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்




