இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது

ஸ்ரீரங்கம் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:27 pm

Syndication

ஸ்ரீரங்கம் பகுதியில் ஆடு திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் ஆா்.எஸ். சாலையில் வசிப்பவா் குணசேகரன் (28). இவா் தனது வீட்டின் அருகே செவ்வாய்க்கிழமை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். இதில் ஒரு ஆடு காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், ஆடு திருடியதாக ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (26) மற்றும் முருகன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ஆட்டை மீட்டனா். மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட விக்கி (எ) ராமசந்திரனை (25) தேடி வருகின்றனா்.