உணவுத் தொழில் என்பது லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நட்சத்திர ஹோட்டல்கள் முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே சாலையோரங்களில் செயல்பட்டு வரும் தள்ளுவண்டி உணவகங்கள் என லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் இந்த உணவகங்கள் மூடப்படும்போது இங்கு பணியாற்றி வரும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், உணவகங்களை நம்பி விடுதிகளில் தங்கியிருக்கும் வெளியூரைச் சோ்ந்த தொழிலாளா்களும், கல்லூரி மாணவா்களும் பாதிக்கப்படுவா்.