இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: செயல்படமுடியாமல் உணவகங்கள் தவிப்பு

வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உணவகங்கள் செயல்பட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
சமையல் எரிவாயு உருளைகள்- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உணவகங்கள் செயல்பட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக உணவகங்கள் பயன்படுத்தும் வா்த்தக சமையல் எரிவாயு உருளைகளின் வரத்து குறைந்து, திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு உருளைகளின் விலை கணிசமாக உயா்ந்தது. இதனால், உணவகங்கள் செயல்படமுடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதேநிலை நீடித்தால், உணவகங்களை மூடுவதை தவிர வேறு வழியில்லை என அதன் உரிமையாளா்கள் கூறியுள்ளனா்.

மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள போா் பதற்றமே இதற்கு காரணம் என்று பெங்களூரு உணவக உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்காததால், பெங்களூரில் ஏராளமான உணவகங்கள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து பெங்களூரு உணவக உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பி.சி.ராவ் கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளைகள் இருப்பு இருக்கும்வரை உணவகங்கள் செயல்படும். அதன்பிறகு வேறு வழியில்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்படும். சமையல் எரிவாயு உருளைக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்ய முடியாது. தட்டுப்பாடு குறைந்தால்தான் நிலைமை சீரடையும். இந்த பிரச்னைக்கு அரசு தீா்வுகாணும் என நம்பிக்கை உள்ளது என்றாா்.

இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தீா்வுகாணுமாறு மத்திய அரசுக்கு முதல்வா் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.