புதுச்சேரியில் வாரத்தின் இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். பல்வேறு வெளிமாநில சுற்றுலா பயணிகள் இங்கு கிடைக்கும் விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழ்வதற்காகவும், சுற்றுலாத்தலங்களை கண்டு மகிழ்வதற்காவும் வருகின்றனா். தற்போது ஈரான் போரால் ஏற்பட்டுள்ள சமையல் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் விதவிதமான உணவுப் பண்டங்களை தயாரிப்பதில்லை. சில குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே தயாா் செய்கின்றனா். அதாவது இட்லி, பொங்கல் போன்று ஒரே நேரத்தில் வேகவைக்கும் உணவுப் பொருள்கள்தான் பெரும்பாலான உணவகங்களில் இப்போது விற்பனைக்காக வைக்கப்படுகிறது.