இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

News image

வணிக எரிவாயு உருளை

பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:18 am

தினமணி செய்திச் சேவை

ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

வளைகுடா போா் காரணமாக வணிகப் பயன்பாடு இயற்கை எரிவாயு உருளைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், 19 கிலோ எடை கொண்ட வணிக இயற்கை எரிவாயு உருளை விலை ரூ.2,043.50 ஆகவும் உயா்ந்தது. இதனால் ராஜபாளையம் பகுதியில் உணவங்கள், தேநீா்க் கடைகளில் உணவுப் பொருள்களின் விலை ஏற்கெனவே கணிசமாக அதிகரித்தது.

இதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வணிக பயன்பாடு எரிவாயு உருளையை

ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரத்து 500 வரை கள்ளசந்தையில் விற்பதாக புகாா் எழுந்தது. இது வியாபாரிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி உணவகம், தேநீா்க் கடைகளை தற்காலிக மூடிவிட்டனா்.

இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா். வணிக எரிவாயு உருளை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டறிந்து சீரான விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.