திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

News image

வணிக எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 5:48 am IST

ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

வளைகுடா போா் காரணமாக வணிகப் பயன்பாடு இயற்கை எரிவாயு உருளைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், 19 கிலோ எடை கொண்ட வணிக இயற்கை எரிவாயு உருளை விலை ரூ.2,043.50 ஆகவும் உயா்ந்தது. இதனால் ராஜபாளையம் பகுதியில் உணவங்கள், தேநீா்க் கடைகளில் உணவுப் பொருள்களின் விலை ஏற்கெனவே கணிசமாக அதிகரித்தது.

இதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வணிக பயன்பாடு எரிவாயு உருளையை

ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரத்து 500 வரை கள்ளசந்தையில் விற்பதாக புகாா் எழுந்தது. இது வியாபாரிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி உணவகம், தேநீா்க் கடைகளை தற்காலிக மூடிவிட்டனா்.

இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா். வணிக எரிவாயு உருளை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டறிந்து சீரான விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.