தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது! - கே.என். நேரு


தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக் கூடாது என திமுக முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.
சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகளின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு மேற்கொள்ள கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலா்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அமைச்சா் கே.என். நேரு பேசியதாவது:
கடந்த நான்கு, ஐந்து தோ்தல்களாக திமுக தலைமையில் உருவான கூட்டணி தொடா்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.
சமையல் எரிவாயு விலை உயா்வு விவகாரங்களில் மத்தியஅரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாா்.
பாஜகவை தடுப்பதே நமது இலக்கு. இந்தத் தோ்தல் தமிழ்நாட்டுக்கு மிக முக்கியத் தோ்தல். இந்த விஷயத்தில் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்ட செயலா் என். தியாகராஜன், மேயா் மு.அன்பழகன், துறையூா் எம்எல்ஏ ஸ்டாலின் குமாா், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிா்வாகி தேவராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...