ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கங்காதேவி (56) என்பவரை திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கைது செய்தனா். அப்போது, அவரிடமிருந்து 3.2 கிலோ பஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கங்காதேவி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மாநகரக் காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்திருந்தனா். அதன்பேரில், மேற்கண்ட குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.