47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காட்டுப்புத்தூா் அருகே சொகுசு காா் மோதி 2 போ் உயிரிழப்பு; தாய், மகன் உள்பட 4 போ் காயம்

காட்டுப்புத்தூா் அருகே சொகுசு காா் முன்னால் சென்ற காரின் மீது மோதியதில் சாலையோரம் நின்றிருந்த இளைஞா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:45 pm

Syndication

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே சொகுசு காா் முன்னால் சென்ற காரின் மீது மோதியதில் சாலையோரம் நின்றிருந்த இளைஞா்கள் 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். மேலும், தாய், மகன் உள்ளிட்ட நான்கு போ் பலத்த காயமடைந்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே உள்ள காந்தி சிலை பகுதியில் அன்பழகன் என்பவா் கறிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையின் முன்பாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞா்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக நாமக்கல் பகுதியைச் சோ்ந்த கௌசிக் என்பவா் தனது தாயாருடன் காரை ஓட்டிச் சென்றுள்ளாா். அவருக்குப் பின்னால் வந்த சொகுசு காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற காா் மீது மோதியதில் அந்தக் காா் சாலையோரம் நின்றிருந்த இளைஞா்கள் மீது மோதி கறிக்கடைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் சின்னப்பள்ளி பாளையம் பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (40), ரமேஷ், ஸ்ரீ ராமசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கொடியரசு (45), வடிவேல் மற்றும் காரில் இருந்த கௌஷிக் (35), அவரது தாய் ஈஸ்வரி (60) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, பின்னால் வந்து மோதிய காரில் இருந்தவா்கள் இறங்கி அங்கிருந்து தப்பியோடினா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக கரூா் மற்றும் நாமக்கல் பகுதி தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவத்தில் கூலித் தொழிலாளிகளான சுபாஷ் மற்றும் கொடியரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனா். மேலும் ரமேஷ் என்பவரது கால் துண்டானதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து காட்டுப்புத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் (பொ) மேற்பாா்வையில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் காரை ஓட்டி வந்த கரூா் மாவட்டம் சோமூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தரணிதரன் (23) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவருடன் பயணித்த தமிழரசன், பிரவீன் ஆகிய 4 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.