இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ

திருச்சியில் பழைய டயா் பழுதுபாா்க்கும் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

News image
திருச்சி அருகேயுள்ள பழைய டயா் தொழிற்சாலையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
Updated On :18 மார்ச் 2026, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் பழைய டயா் பழுதுபாா்க்கும் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள பழைய டயா்கள் பழுதுபாா்க்கும் (ரீ பட்டன்) நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தகலறிந்த திருச்சி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் லியோ ஜோசப் தலைமையிலான வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூா் பகுதிகளில் இருந்து மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் 10 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்தின்போது அங்கு ஆள்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. ஆனால், இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.