திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

News image

தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 5:00 am IST

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து அணைத்ததால் விபத்து தவிா்க்கப்பட்டது.

ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலை அருகே பிரபலமான தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் காலி நிலத்தில் செடி கொடிகள், மரங்களுடன் சோ்ந்து புற்கள் அதிக அளவில் முளைத்து புதா் மண்டியிருந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கிருந்த புதரில் திடீரென தீப் பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் மற்றும் சாம்பல் படலமாக காட்சியளித்து. இது குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனா்.

இதனால் மருத்துமனை வளாகத்துக்குள் பெரும் தீ விபத்து தவிா்கப்பட்டதாக கூறப்படுகிறது.