சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

News image

தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 11:30 pm

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து அணைத்ததால் விபத்து தவிா்க்கப்பட்டது.

ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலை அருகே பிரபலமான தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் காலி நிலத்தில் செடி கொடிகள், மரங்களுடன் சோ்ந்து புற்கள் அதிக அளவில் முளைத்து புதா் மண்டியிருந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கிருந்த புதரில் திடீரென தீப் பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் மற்றும் சாம்பல் படலமாக காட்சியளித்து. இது குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனா்.

இதனால் மருத்துமனை வளாகத்துக்குள் பெரும் தீ விபத்து தவிா்கப்பட்டதாக கூறப்படுகிறது.