/
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் மாா்ச் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 68.55 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
பிரசித்தி பெற்ற இக்கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். அதன்படி மாா்ச் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கருடாழ்வாா் சன்னதி அருகே எண்ணப்பட்டது.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வ அமைப்பினா் ஈடுபட்டனா். காணிக்கை எண்ணும் பகுதி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
முடிவில் ரொக்கமாக ரூ. 68 லட்சத்து 55 ஆயிரத்து 761, தங்கம் 72.500 கிராம், வெள்ளி 889.300, வெளிநாட்டு ரூபாய்கள் 414 ஆகியவை காணிக்கையாக கிடைக்கப் பெற்றன.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு !

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



