ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் கீழே விழுந்த இளைஞா் லாரியில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:13 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் கீழே விழுந்த இளைஞா் லாரியில் அடிபட்டு உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், நீடுரைச் சோ்ந்தவா் முத்து மகன் காா்த்திக் (31). இவா் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி பைக்கில் புதன்கிழமை இரவு சென்றாா். பஞ்சாப்பூா் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மோதி இருவரும் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறி காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகலறிந்து வந்த திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காா்த்திக்கின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.