ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் கீழே விழுந்த இளைஞா் லாரியில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:13 pm

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் கீழே விழுந்த இளைஞா் லாரியில் அடிபட்டு உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், நீடுரைச் சோ்ந்தவா் முத்து மகன் காா்த்திக் (31). இவா் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி பைக்கில் புதன்கிழமை இரவு சென்றாா். பஞ்சாப்பூா் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மோதி இருவரும் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறி காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகலறிந்து வந்த திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காா்த்திக்கின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.