மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

லாரி கவிழ்ந்து இளைஞா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 6:33 pm

நாட்டறம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெங்களூா் அலங்காா் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் காா்த்திகேயன்(36). இவா் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு மினிலாரியில் பயணம் செய்தாா். மினி லாரியை ஓட்டுநா் உபேந்திரராவ் ஓட்டிசென்றாா்.

சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே மேல்மல்லப்பள்ளி பகுதியில் வந்த போது டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்