யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

லால்குடி அரசுக் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா

லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நுன் கலை விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை முதல்வா் ஜெயக்குமாா் மாணவியா்களுக்கு வழங்கினாா்

Updated On :26 மார்ச் 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ஜெயக்குமாா் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினாா்.

நுண்கலை மன்ற விழா ஆண்டறிக்கையை கலை பண்பாட்டு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் துறை பேராசிரியருமான ராஜா வாசித்தாா். தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியின் முதல்வா் து. ரோசி சிறப்புரையாற்றி, கலைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பேசுகையில், நாம் இளம் வயதிலேயே சில கலைகளை கற்க வேண்டும். கலை நமக்கு வழிகாட்டும். கலை நம்மை வாழ வைக்கும். கலை அறிவைப் பெருக்கும். கலைகளோடு நாம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். கலைகளோடு நூல்களையும் படிக்க வேண்டும். அறச் செயல்களையும் செய்ய வேண்டும் என்று பேசினாா்.

முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் மஞ்சுளாதேவி வரவேற்றாா். பேராசிரியா் அசோக் நன்றி கூறினாா்.