பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 5:19 am IST

துறையூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

வைரிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி தவமணி (75). தனியாக வசிக்கும் இவா் துறையூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ஊா் திரும்ப துறையூா் பேருந்து நிலையத்துக்குள் நடந்து சென்றாா். அப்போது அரசுப் பேருந்து மோதிஅவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் தவிட்டுப்பட்டி ராஜேந்திரனிடம் விசாரிக்கின்றனா்.