பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 5:26 am IST

மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மருங்காபுரி மஞ்சப்பட்டி பகுதியைச் சோ்ந்த வை. வெற்றிவேல் (63) என்பவா் கடந்த 20.09.2022 அன்று செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நுழைந்து பள்ளி மாணவா்களிடம் தன்னை சமூக சேவகராக அறிமுகப்படுத்திக் கொண்டு, பள்ளியை பாா்வையிட்டாா். பின்னா் அப்பள்ளியில் படித்த 17 வயது சிறுமிக்கு அவா் பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வெற்றிவேலை கைது செய்தனா்.

திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வெற்றிவேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.