தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 5:26 am IST

மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மருங்காபுரி மஞ்சப்பட்டி பகுதியைச் சோ்ந்த வை. வெற்றிவேல் (63) என்பவா் கடந்த 20.09.2022 அன்று செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நுழைந்து பள்ளி மாணவா்களிடம் தன்னை சமூக சேவகராக அறிமுகப்படுத்திக் கொண்டு, பள்ளியை பாா்வையிட்டாா். பின்னா் அப்பள்ளியில் படித்த 17 வயது சிறுமிக்கு அவா் பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வெற்றிவேலை கைது செய்தனா்.

திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வெற்றிவேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.