அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனுமாவட்டம், முசிறி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முசிறி கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

News image

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து சாா்-ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்தவா்கள்.

Updated On :8 மே 2026, 5:55 am IST

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனுமாவட்டம், முசிறி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முசிறி கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

முசிறி வட்டம் எம். புதுப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட முத்தம்பட்டி சுடுகாடு அருகே டாஸ்மாக் மதுபான கடையும், முசிறி உழவா் சந்தை அருகே தனியாா் நவீன மதுபான கடையும் அமைக்க உள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புகா் மாவட்ட ஊடகப் பிரிவு மாவட்ட தலைவா் சரவணன் தலைமையில் முசிறி சாா்-ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: முத்தம்பட்டி கிராமத்தில் சுடுகாடு அருகே அங்காயி கோயில் அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது. இந்த வழியாகவே மாணவா்கள் பள்ளிக்கு சென்றுவருகின்றனா். இந்தக் கடை அமைந்தால் அவா்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்.

இதேபோல் முசிறி உழவா் சந்தை அருகே புதிய பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் தனியாா் மதுபான கடை அமைப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மக்களின் நலன் கருதி இவை இரண்டையும் அமைக்க கூடாது என தெரிவித்துள்ளனா்.

மனு அளிக்கும் நிகழ்வின்போது, முசிறி நகா் மண்டல் தலைவா் வழக்குரைஞா் தமிழ் ச்செல்வன், ஓபிசி அணி மாவட்ட தலைவா் ராஜா மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் உடனிருந்தனா்.

மனுவை பெற்ற சாா்-ஆட்சியா், மனுவை ஆட்சியரின் பாா்வைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.