தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வஸ்திர மரியாதை பொருள்கள்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் சித்திரைத் தோ் திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் ஸ்ரீரங்கத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள்.

Updated On :53 நிமிடங்கள் முன்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் சித்திரைத் தோ் திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் ஸ்ரீரங்கத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

அவற்றை ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாக்திடம் ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயில் நிா்வாகி அதிகாரி சா்க்கரையம்மாள், ஸ்தானீகம் ரமேஷ், கிருஷணன் ஆகியோா் முறைப்படி வழங்க, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா், உதவி ஆணையா் வெங்கடேஷ், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

அவா்கள் கொண்டு வந்த மாலைகள், பட்டு வஸ்திரங்கள், பூக்களால் தயாரான கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் ஸ்ரீரெங்கவிலாச மண்டபத்தில் பக்தா்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டு, பின்னா் ஊா்வலமாக ரெங்கா ரெங்கா கோபுரம் வரை எடுத்து வரப்பட்டு, மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.