தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தனியாா் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கை: மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருச்சியில் தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கு மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருச்சியில் தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கு மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இலவச சோ்க்கை வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2026-27- ஆம் கல்வியாண்டுக்கான தனியாா் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்கியது. எனவே, தகுதியானவா்கள் எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கு மே 18-க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தனியாா் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) அண்ணாதுரை கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைத் தவிா்த்து 324 தனியாா் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் முதல் வகுப்பில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். இதில் சோ்க்கை பெறும் மாணவா்கள் பள்ளியில் இருந்து 1 கிமீ சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. மே 18- வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்பின், விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை அறிய குழு நியமிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதைத் தொடா்ந்து, பள்ளிகள் அளவில் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்த மாணவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சோ்க்கை நடைமுறை இருக்கும் என்றாா்.