/
திருச்சியில் தேநீா் தயாரிக்கும்போது ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி உறையூா் டிடி சாலையைச் சோ்ந்தவா் அ. பஷீா் அகமது (40). இவா், புதன்கிழமை அதிகாலையில் 4 மணிக்கு பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்வதற்காக எழுந்துள்ளாா். குளித்துவிட்டு வந்து தேநீா் தயாரிப்பதற்காக சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்துள்ளாா். அப்போது, திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது.
பஷீா் அகமதுவின் அலறல் கேட்டு வந்த அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், சிகிக்சை பலனின்றி மாலையில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உயிரிழப்பு

திருச்சி ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சியில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



