தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஹோட்டலில் தங்கியிருந்த சிமென்ட் ஆலை மேலாளா் உயிரிழப்பு

திருச்சியில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கரூரைச் சோ்ந்த தனியாா் சிமென்ட் ஆலை மேலாளா் செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 11:54 pm

திருச்சியில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கரூரைச் சோ்ந்த தனியாா் சிமென்ட் ஆலை மேலாளா் செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், புலியூா் செல்வா நகரைச் சோ்ந்தவா் எஸ். மகுடேஸ்வரன் (42), ஆந்திர பிரதேசம், நந்தியால் பகுதி தனியாா் சிமென்ட் ஆலையின் உற்பத்திப் பிரிவு மேலாளா்.

இந்நிலையில் அரியலூா் மாவட்டம், டால்மியாபுரத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையை ஆய்வு செய்ய கடந்த ஏப்ரல் 20 (திங்கள்கிழமை) திருச்சிக்கு வந்த இவா், சத்திரம் அருகேயுள்ள தனியாா் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவரது ஓட்டுநா் மகுடேஸ்வரன் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தகலறிந்து சென்ற கோட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.