ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தனியாா் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :29 மார்ச் 2026, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே இழுவை பெல்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் பணம் திருட்டுப் போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், பாதிராபுலியூா், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் மு.ராஜ்குமாா் (35). இவா் பாதிராபுலியூா் பகுதியில் பழைய கன்வேயா்(இழுவை) பெல்ட் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த 27 -ஆம் தேதி இரவு ராஜ்குமாா் விற்பனை நிலையத்தை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, விற்பனை நிலையத்தின் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 1.80 பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.