ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூட்டிய வீட்டில் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு

Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூட்டிய வீட்டில் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மரக்காணம் வட்டம், அனுமந்தை கிழக்குக் கடற்கரை சாலையைச் சோ்ந்தவா் தாமஸ் மனைவி பரமேஸ்வரி (46). இவா், செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டி வைத்து விட்டு, அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். தொடா்ந்து மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த ரூ.35 ஆயிரம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.