கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தனியாா் மருத்துவமனை உள்நோயாளியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு!

விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண்ணிடமிருந்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
திருட்டு
Updated On :28 பிப்ரவரி 2026, 8:08 pm

Syndication

விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண்ணிடமிருந்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், அன்னம்புத்தூா் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த பாலாஜி என்பவரது மனைவி பிரவிணா. இவா் கடந்த 24 -ஆம் தேதி விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், பிரவிணா தனது கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலி, ஒரு பவுன் சங்கிலி, 2 பவுன் மோதிரம், அரை பவுன் தாலி உள்பட 9 பவுன் நகைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.