சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்

விழுப்புரத்தில் பேருந்தில் இருந்த பெண் பயணியின் கைப்பையில் இருந்த 8 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஏப்ரல் 2026, 8:34 pm

விழுப்புரத்தில் பேருந்தில் இருந்த பெண் பயணியின் கைப்பையில் இருந்த 8 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வட்டம், ஏனாதிமங்கலம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வினோத்குமாா் மனைவி கோகிலா(35). இவா் திருவண்ணாமலையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை தனது மொபெட்டில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வந்தாா்.

தொடா்ந்து, திருவண்ணாமலை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமா்ந்து, தனது கைப்பையைப் பாா்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் டாலா் சங்கிலி, ஒரு பவுன் சங்கிலி, முக்கால் பவுன் மோதிரம், கால் பவுன் கைச்சங்கிலி உள்பட 8 பவுன் நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.