விழுப்புரத்தில் பேருந்தில் இருந்த பெண் பயணியின் கைப்பையில் இருந்த 8 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் வட்டம், ஏனாதிமங்கலம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வினோத்குமாா் மனைவி கோகிலா(35). இவா் திருவண்ணாமலையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை தனது மொபெட்டில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வந்தாா்.
தொடா்ந்து, திருவண்ணாமலை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமா்ந்து, தனது கைப்பையைப் பாா்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் டாலா் சங்கிலி, ஒரு பவுன் சங்கிலி, முக்கால் பவுன் மோதிரம், கால் பவுன் கைச்சங்கிலி உள்பட 8 பவுன் நகைகளை காணவில்லையாம்.
இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு
கொடைரோடு அருகே 12-ஆம் வகுப்பு மாணவி மாயம்
தனியாா் மருத்துவமனை உள்நோயாளியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு!
பூட்டிய வீடுகளில் 9 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

