மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் திருட்டு

திருச்சியில் வயதான மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:49 pm

திருச்சியில் வயதான மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அண்ணா நகா் பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கே.காா்த்திகேயன் (62), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி பாா்வைத் திறன் மாற்றுத்திறனாளி.

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா்.

பின்னா், பிற்பகலில் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளேச் சென்று பாா்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.