லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான 6 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது பற்றி...

News image

மாநிலங்களவைத் தேர்தலுக்கான 6 வேட்பாளர்கள்

Updated On :6 மார்ச் 2026, 7:40 am

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்காக வழங்கப்பட்ட 6 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதனின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகவுள்ள திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் அதிமுக சார்பில் தம்பிதுரையும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதனும் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் திமுகவின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ஆகிய 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததாலும் வேட்புமனுவை முழுமையாக நிரப்பாததாலும் சுயேச்சையாகப் போட்டியிட்ட சுவாமிநாதனின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேறு யாரும் போட்டியிடாததால் இந்த 6 பேரும் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Rajya Sabha elections: Nominations of 6 people including Trichy Siva and Thambidurai accepted

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.