விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் நகைகள் திருட்டு

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:47 pm

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகா் அய்யப்பன் நகரைச் சோ்ந்தவா் பொ. சண்முகசுந்தரம் (52), ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டாமல் வெளியே சென்றுள்ளாா். பின்னா், அன்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.