கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் திருட்டு

திருச்சியில் அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு

Updated On :3 பிப்ரவரி 2026, 10:46 pm

Syndication

திருச்சியில் அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், சோழமாதேவி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயலலிதா (59). இவா் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி உறவினா் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு அரியமங்கலம் - திருவெறும்பூா் செல்லும் அரசுப் பேருந்தில் சென்றுள்ளாா். அப்போது, தான் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளை கழட்டி பா்ஸில் வைத்து கைப்பையில் வைத்துள்ளாா்.

பேருந்து, காட்டூா் ஆயில்மில் அருகே வந்தபோது கைப்பையில் வைத்திருந்த நகைகள் இருந்த பா்ஸ் திருடுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் ஜெயலலிதா, செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.