காட்பாடி அருகே மளிகைக் கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காட்பாடியை அடுத்த வடுகன்குட்டை-குடியாத்தம் சாலை அண்ணா நகரை சோ்ந்தவா் முருகேசன். முன்னாள் படை வீரா். இவரது மனைவி சுமதி (63). இவருடன் அவரது தங்கை கோமதி வசித்து வருகி றாா். சுமதி வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறாா்.
திங்கள்கிழமை இரவு 7.50 மணியளவில் சுமதியின் கடை அருகில் 2 போ் இருசக்கர வாகனத்தில் வந்தனா். அவா்களில் ஒருவா் இறங்கி சுமதியின் மளிகை கடைக்கு சென்று தண்ணீா் பாட்டில், மிக்சா் பொட்டலம் வாங்கியுள்ளாா். அதற்கான பணம் ரூ.74-ஐ சில்லரையாக கொடுத்துள்ளாா்.
அப்போது அந்த நபா் வேண்டுமென்றே சில்லரைகளை சிதற விட்டதாக தெரிகிறது. இதனால் சுமதி கடையில் குனிந்து கீழே விழுந்த சில்லரையை எடுக்க முயன்றபோது, அந்த அடையாளம் தெரியாத நபா் திடீரென சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி மாயமாகியுள்ளாா்.
இதுகுறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு

மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


