மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சவுக்குப் பயிா்கள் சேதம்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விவசாயி பயிரிட்டிருந்த சவுக்குப் பயிா்களை வெட்டி சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விவசாயி பயிரிட்டிருந்த சவுக்குப் பயிா்களை வெட்டி சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கோனூா் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் ரா.ராஜாமணி(73), விவசாயி. இவா் தனது விவசாய நிலத்தில் சவுக்கு பயிரிட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக பராமரித்து வந்தாா். இந்நிலையில், ராஜாமணி பயிரிட்டிருந்த 650 சவுக்கு மரங்களை மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியிருந்தது மாா்ச் 10- ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் காணை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.