/
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்தபோது இரும்புக் கதவு விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அ.ஆனந்தவேல்(40). இவா் மயிலத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சுமைத் தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், ஆனந்தவேல் திங்கள்கிழமை நிறுவனத்தில் பணியிலிருந்தபோது, பழைய இரும்பு க் கதவு ஆனந்தவேல் மீது விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஆனந்தவேல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

ராதாபுரம் அருகே தீக்குளித்த த.வெ.க நிா்வாகி உயிரிழப்பு

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



